
தேசிய மாணவர் படை (NCC) சிறப்பு முகாம்

நம் கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மற்றும் காரைக்குடி, தமிழ்நாடு 9 பட்டாலியன் இணைந்து 11/02/2021 முதல் 15/02/2021 (5 நாட்கள்) இராணுவ சிறப்பு பயிற்சி முகாம் நம் கல்லூரியில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் துவக்கிவைத்தார். இம்முகாமில் நம் கல்லூரி, இராமநாதபுரம், சேதுபதி அரசினர் கலை கல்லூரி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி மற்றும் கீழக்கரை, முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த தேசிய மாணவர் படை (NCC) மாணவ-மாணவியர் 140 பேர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர். இப்பயிற்சி முகாமில் கர்னல் ரஜினீஸ் பிரதாப், கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் அஜய் சிங் பர்கோட்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி முகாமில் இராணுவ அணிவகுப்பு, துப்பாக்கி கையாளுதல், வரைபடம் படித்தல், இராணுவ தகவல் தொடர்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமை நம் கல்லூரி NCC அதிகாரி Lt. M. அபூபக்கர் சித்திக், இராமநாதபுரம், சேதுபதி அரசு கல்லூரி NCC அதிகாரி முனைவர் உத்திர செல்வம், சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி NCC அதிகாரி Lt. சௌந்தர ராஜன் மற்றும் கீழக்கரை, முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி NCC அதிகாரி மருதாசல மூர்த்தி ஆகியோர் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தனர்.




