
வேதியியல் கருத்தரங்கம்

வேதியியல் துறை சார்பாக “மூலக்கூறுகளின் வடிவத்தின் (Point Groups) அடிப்படையில் அதன் பண்புகளை அறியும் எளியமுறை” குறித்த கருத்தரங்கம் 24/09/2019 அன்று நடைபெற்றது. இணைப் பேராசிரியர் திரு. S.E.A. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம், பாப்ப நாய்க்கர் பாளையம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, முதுகலை வேதியியல் ஆசிரியர் முனைவர் S.K. கண்ணன் அவர்கள் மூலக்கூறுகளின் வடிவத்தின் (Point Groups) அடிப்படையில் அதன் பண்புகளை அறியும் எளியமுறை குறித்து சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். துறைசார் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்குபெற்று பயன்பெற்றனர்.
