
“யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் எழுதிய “யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா 16/07/2019 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் ஷீபா வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மலேசியா பிரமுகர்கள் ஜனாப் S.H. அப்துல் பாரி, B.K., BSK. மற்றும் ஜனாப் S. முஹம்மது நஸ்ருதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூலை வெளியிட்டனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை திருமதி M. கதீஜா பீவி நன்றி கூறினார். தமிழ்த்துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


