
நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம்-1

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஏழுநாள் சிறப்பு முகாம் திருவள்ளூர் கிராமத்தில் 06/02/2020 அன்று துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இளையான்குடி, வட்டாச்சியர் திரு. V. ரமேஷ், இளையான்குடி, துணை வட்டாச்சியர், திரு. R. கிருஷ்ண குமார், இளையான்குடி, வருவாய் ஆய்வாளர் திருமதி நாகநந்தினி, திருவள்ளூர், வருவாய் ஆய்வாளர் திரு. U.K. காந்திதாஸ், திருவள்ளூர், கிராம நிர்வாக அதிகாரி, திரு. S. பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், திரு. M. ராஜேந்திரன் மற்றும் திருவள்ளூர், ஊராட்சி மன்ற தலைவர், திருமதி K. சாந்தி கருப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் T.C. முஹம்மது முனீப் மற்றும் செல்வி R. செய்யது அலி பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கணிப்பொறி பயன்பாட்டியல் துறை, உதவிப் பேராசிரியர் திரு. S. அரபாத் ஹசன் மற்றும் பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் S.M. நர்கீஸ் பேகம் உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.




