
தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), தேசிய மாணவர் படை (NCC), தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF) மற்றும் இளையான்குடி தாலுகா அலுவலகம் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் 24/09/2019 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி திரு. M. அபூபக்கர் சித்திக் வரவேற்றார். சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் திரு. மாரிக்கனி அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்குபெற்று பயிற்சிபெற்றனர். இளையான்குடி தாலுகா அலுவலகம் சார்பாக துணை தாசில்தார் திரு. விஜயகுமார், திரு. முத்துவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி நந்தினி ஆகியோர் கலந்துகொண்டனர் . இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் நன்றி கூறினார்.




