
தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

கல்லூரியில் முதுகலை வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை மாணவ-மாணவிகள் 30 பேர் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் “பசுமை தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் 12/02/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். மூன்று மாணவிகள் மற்றும் கணினிப்பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் S. வெங்கடேசன் மற்றும் திரு. M. அப்பாஸ் ஆகியோரும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் வழங்கி பாராட்டினார். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள்.