
தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) பயிலும் 27 மாணவிகள் மற்றும் உதவிப்பேராசிரியை திருமதி M. நாகஜோதி ஆகியோர் இராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வியாபாரத்தில் புதுமைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் 09/03/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியர் முனைவர் S. வெங்கடேசன் அவர்கள் “வெளிநாட்டு முதலீடுகளின் தாக்கம்” என்னும் தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார். பங்குபெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.