
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழா

அண்ணல் காந்தி அடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக 05/10/2019 அன்று 61 மாணவிகள், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் வல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள “அகல்” என்று அழைக்கப்படும் இயற்கை விவசாயப் பண்ணைக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்முறை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர். நிகழ்வினை துறைத்தலைவர் முனைவர் P. இப்ராஹிம், உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் மற்றும் உதவிப் பேராசிரியை முனைவர் ஷிபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.