
கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி

நம் கல்லூரியில் ஆங்கிலத் துறையை சார்ந்த 32 மாணவிகள் மதுரை, Lady Doak கல்லூரி 29/08/2019 அன்று நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் (EEGAI’ 19) பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M. நாஜிலா மரியம், தமிழ் கவிதை எழுதுதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். இரண்டாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M.K. சீரின் பாத்திமா, தமிழ் பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். இரண்டாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் K. நிலோபார் நிஷா மற்றும் S. ஆசிபா சீரின் ஆகியோர் முக ஓவியம் வரைதல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றனர்.
மற்ற மாணவிகள் பங்கேற்பு சான்றிதழ்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்லூரி ஆட்சிக்குழு, துணை முதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பாக வாழ்த்தினார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் A. அனிஷா பர்வீன், செல்வி R. செய்யது அலி பாத்திமா மற்றும் திருமதி D. வர்ஷா ஆகியோர் மாணவிகளை ஒருங்கிணைத்தனர்.


