
கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் 20 மாணவியரும், முதுகலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் 2 மாணவியரும், முதுகுளத்தூர், சோணை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20/02/2020 அன்று “பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்றனர். 12 மாணவிகளும், உதவிப்பேராசிரியை G. ஞானசுந்தரி மற்றும் R. வெண்ணிலா ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில் துறைத்தலைவர் திரு. இப்ராஹிம் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் S. வெங்கடேசன்.