
இளையோர் செஞ்சிலுவை சங்க விழிப்புணர்வு பட்டிமன்றம்

இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 16/02/2020 அன்று விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்கேற்பவர்கள் ஆற்றல் மிக்க இளையோரே? அனுபவமிக்க முதியோரே? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பேராவூரணி, தலைமையாசிரியர் திருமிகு K.V. தாமரைச்செல்வன் அவர்கள் நடுவராக, மாணவ-மாணவிகள் S. ஆரோக்கிய ஜெனிபர், T. சுந்தரபாண்டி, M. புவனேஸ்வரி மற்றும் S.J. பிரவீன் குமார் ஆகியோர் ஆற்றல் மிக்க இளையோரே! என்னும் தலைப்பிலும் S. நைனாரப்பா, N. நிலோபர் சரிபா, H. சேக் முஹம்மது பிலாலி மற்றும் G. விஜயலக்ஷ்மி ஆகியோர் அனுபவமிக்க முதியோரே! என்னும் தலைப்பிலும் விவாதம் செய்தனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் K.S.H. சிராஜுதீன் உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் நன்றி கூறினார்.

