
இயந்திரவழி கற்றல் கருத்தரங்கம்

முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக “இயந்திர வழி கற்றல்” குறித்த கருத்தரங்கு 22/09/2019 அன்று நடைபெற்றது. துறைத்தலைவர் திரு. M. மனோகரன் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரி, கணிப்பொறி அறிவியல் உதவிப் பேராசிரியை முனைவர் J. அருணாதேவி “கற்றலில் கணிப்பொறி பயன்பாடு, இயந்திரவழி கற்றலின் முக்கியத்துவம்” குறித்து சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் திரு. M. முஹம்மது சிராஜுதீன் நன்றி கூறினார். கருத்தரங்கில் துறைசார் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்குபெற்று பயன்பெற்றனர்.



