
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளையான்குடி தாலுகா அலுவலகம் இணைந்து இளம் வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 26/09/2018 அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். இளையான்குடி துணை வட்டாச்சியர் திருமதி M. உமா மீனாட்சி, அவர்கள் புதிய (இளம்) வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முறை குறித்து விவரித்தார். மண்டல துணை வட்டாச்சியர் திரு. G. பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் திருமதி நாகநந்தினி மற்றும் திரு. M. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இறுதியாக வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் M. பீர் முஹம்மது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

