
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (நான்காம் நாள்)

நான்காம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 16/02/2019 அன்று நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் அவர்களின் வரவேற்புடன் தொடங்கியது. சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். இளையான்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஆ. அழகுமீனாள் மற்றும் இளையான்குடி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. T.N. அன்புத்துரை ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்து சிறப்புரையாற்றினர். இறுதியாக மாணவ-மாணவிகள் வீடு வீடாக சென்று கிராம மக்களின் குறைகளை அறிந்து, எழுத்துப்பூர்வ மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திருமதி S.M. நர்கீஸ் பேகம் மற்றும் முனைவர் A. அப்ரோஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
