
தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் நம் கல்லூரி மாணவி பங்கேற்றார்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும், அமெரிக்க தூதரகமும் இணைந்து 09/08/2018 அன்று “ஊடகத்துறையில் பாலின சித்தரிப்பு” என்னும் தலைப்பில் தேசிய அளவில் நடத்திய கட்டுரை போட்டியில் பங்குபெற்ற 450 மாணவ-மாணவிகளில் 45 மாணவ-மாணவிகள் 28/09/2018 அன்று மேற்கூறிய தலைப்பில் சென்னையில் நடைபெற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனான உயர்மட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இந்த 45 மாணவ-மாணவிகளில் நம் கல்லூரி ஆங்கிலத் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி செல்வி சபியா பேகமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு, துணைமுதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்தினார்.
