
கருத்தரங்கில் முதல் பரிசு

26/02/2019 அன்று தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான இயற்பியல் கருத்தரங்கில் நம் கல்லூரி மூன்றாமாண்டு இளங்கலை இயற்பியல் பயிலும் மாணவர் சந்தோஷ் ஆய்வு கட்டுரையை சமர்பித்து முதல் பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவரை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் சார்பாக கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் மற்றும் துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் ஆகியோர் பாராட்டினர். அருகில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் K.A.Z. செய்யது அபுதாஹிர் மற்றும் திரு. G. கங்காதரன்.
