
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (மூன்றாம் நாள்)

நாட்டு நலப்பணித் திட்ட மூன்றாம் நாள் முகாம் இன்று (15/02/2019) “சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் தினம்” என்னும் தலைப்பில் காலை 10.30 மணியளவில் இந்திரா நகரில் துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். இந்திரா நகர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மா. சித்ரா அவர்கள் “சுற்றுசூழல் மாசுபடுதலை தவிர்க்க நம் பங்கு” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாலை 2.30 மணியளவில் “மகளிர் தினம்” கொண்டாடப்பட்டது. நம் கல்லூரி மாணவிகளுக்கு ரங்கோலி, பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. R. ஜாஹிர் ஹுசைன், முனைவர் M. பீர் முஹம்மது மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M. அனிஷா பர்வீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

